ஒப்பனை ஒரு நாள் கலையும் !!! மௌலவி றாபி அவர்களே ! http://al-bathr.blogspot.com/2018/09/blog-post_12.html --------------------------- ஷர்க்கி , பரேலவி. --------------------------- மௌலவி றாபி அவர்களே ! உங்களின் பதிலில் நான் தடுமாறுவதாகவும், எனது செழுமை மங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள்.! யார் தடுமாறுகிறார். யாருடைய செழுமை மங்குகின்றது என்பது முக்கியமல்ல. யார் கூறுவது சரி உண்மை எப்பக்கம் இருக்கின்றது என்பதுதான் முக்கியம். கதீம் என்றால் பூர்வீகம் என்பது உங்களுக்குத் தெரியும். இச்சொல் எதார்த்தமாகப் பார்த்தால் அல்லாஹ்வுக்கு மட்டுமே கூறப்படும். மற்றவருக்குக் கூறுவது ஷிர்க். என்பதை மறுக்க மாட்டீர்கள். அது போல் அல்லாஹ்வின் பண்புகளை எதார்த்தமாக அல்லாஹ் அல்லாத எவருக்கும் கூறக் கூடாது. அவ்வாறு கூறுவது ஷிர்க் என்பதையும் மறுக்க மாட்டீர்கள். ஆனால் , கதீம் என்ற சொல்லும் அல்லாஹ்வின் பண்புகளும் திருநாமங்களும் அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. அப்படியாயின் இதை எப்படி நியாயப்படுத்துவது.? அல்லாஹ்வின் பண்புகள் சுயமானவை. இன்னொருவரால் வழங்கப்படாதவை. ஆரம்பம்
புனித தரீகாகளில் கள்ள ஞானிகள்