Skip to main content

Posts

Showing posts from August, 2018

கலீல் அவுன் மௌலானா மறு பிறப்பை ஆதரிக்கின்றாரா.?

கலீல் அவுன் மௌலானா மறு பிறப்பை ஆதரிக்கின்றாரா.? ------------+------------        ஷர்க்கி .-பரேலவி . -----------+------------ கலீல் அவுன் மௌலானாவின்  பின் வரும் கூற்று மறுபிறப்பை ஆதரிப்பது போன்றுள்ளது. பிறப்பு இறப்பின் இரகசியம் ---------------------------------------------- 22-  அழிவென்பதும் இறப்பென்பதும் மறைவென்பதும் செல்லுதல் என்பதும்  மாற்றமேயாகும். உலகம் மாறி மாறிப் பிறக்கிறது. இல்லாவதொன்றுமில்லை. உள்ளவையே எல்லாம். ஆகவே. ஏகத்தில் குறைதல் என்பதோ , நிறைதல் என்பதோ இல்லை. மறைகின்றவைகள் உருமாறி  வெளிவருகின்றன. ஔன் நாயகரின் அருள் மொழிக் கோவை ,பக்,28 "உலகம் மாறி மாறி பிறக்கின்றன." மறைகின்றவைகள் உருமாறி வெளிவருகின்றன. என்ற கருத்துக்களும் படைப்பில் குறை நிறை இல்லை என்பதும், இருப்பவைதான் பின் உருமாறி வருகின்றன என்ற கூற்றுக்களும் ஹிந்துக்களின் மறு பிறப்புக்கோட்பாட்டை உறுதிப்படுத்துகின்றன. மேற்படி கூற்றில், புதிது பதிதான படைப்புக்கள் மறுக்கப்படுகின்றன. அழிந்த அதாவது இறந்த உடலின் அசல் பகுதி வேறு உருவில் மீண்டும் பிறக்கிறது. இக்கோட்பாடு  " அனைத்தும் அழியும்,

ஓம் !என்பது ஓரிறைக்குரிய பெயர் என்பது தவறு!

ஓம் !என்பது ஓரிறைக்குரிய பெயர் என்பது தவறு! *****************************        ஷர்க்கி  , பரேலவி. ***************************** https://facebook.com/story.php?story_fbid=2218084738233768&id=100000967918538&comment_id=2220784344630474 "ஓம் என்பது சத்தியத்தின் தீர்வு!" என்ற தலப்பில் மௌலவி  றிபாய் பாரி அவர்கள் நமது ஆட்சேபனைக்கு பதில் கூறியிருக்கின்றார். அவரின் பதிலில் பின்வருமாறு சில கேள்விகளை எம்மிடம் கேட்கின்றார் . அவர் எம்மிடமிருந்து கேட்கின்ற விளக்கம் இதுதான். "ஹழரத் அவர்களே!தாங்கள் சரியான கருத்தைத்தான் தெரிவிக்கின்றீர்கள் என்றால் "ஓம்"என்பது "ஹு" என்பதற்குரிய வார்த்தை இல்லை அது உணவுக்குச் சொல்லப்படும். அல்லது உடலுக்குச் சொல்லப்படும். அல்லது வானுக்குச் சொல்லப்படும்; அல்லது பூமிக்குச் சொல்லப்படும். ஏதோஒன்றுக்குச் சொல்லப்படும் என்று  விபரித்திருக்கலாம்தானே ....? அதைவிட்டுவிட்டு சும்மா கத்துகின்றீர்கள்... "ஓம் "  என்பது ஆதியும் அந்தமும் அற்ற எவருக்கும் நிகரற்ற ஓரிறைக்கே சொல்லப்படும் என்பது இந்து வேதக்கோட்பாடாகும்.கருத

ஆடத் தெரியாதவருக்கு மேடை  கோணலே தான்.

ஆடத் தெரியாதவருக்கு மேடை  கோணலே தான். -------------------------------------------          ஷர்க்கி  , பரேலவி ------------------------------------------- https://facebook.com/story.php?story_fbid=2218084738233768&id=100000967918538&comment_id=2220784344630474 உங்களின் எழுத்தில் ஆட்சேபனைக்குப் பதில் இல்லை. தற்புகழ்ச்சியும். வசை பாடலும்தான் உண்டு. அது நீங்கள் பாடியதல்ல. உங்களுக்குப் பின்னால் பாடுபவருக்குச் சொந்தமானது. கம்பனை மிகைத்த தமிழ் புலமை கொண்டவன் இன்னும் பிறக்கவில்லை. என்று பொதுவாகக் கூறப்படுகிறது. அதனால் கம்பனை ஞானி என்று யாரும் கூறுவதில்லை. அலியாரின் ஞானம் மறைக்கப்பட்டதல்ல .மற்றவர்களால் விளங்கப்பட்டது. மல்லிகையில் தாமரை பூப்பதில்லை என்று என்பதைத் தாஶ்ரீஶ்ரீன் நாமும் கூறுகிறோம். ஹிந்து ஞானம் பேசுபவரிடத்தில் ஒருபோதும் இஸ்லாமிய தத்துவம்,ஞானம் சுரக்காது. குப்றியத்தை நேசிப்பவரிடத்தில் ஈமானின் வாடையும் வீசாது. குப்றை வெறுப்பது ஈமானின் வெளிப்பாடு. கிதாபில் ஆழம் இருந்தால் எழுத்தில் ஏன் வெளிப்படவில்லை. தமிழ் வித்துவத்தைக்கண்டு மயங்குபவன் முஸ்லிமல்ல. கலீல் அவுனார் தந்

தேவ்பந்திய தப்லிக் வஹ்ஹாபிகளால் இஸ்லாமிய போர்வையில் இந்து போதனைகளே பரப்பும் வாப்பா நாயகம் என்ற கலீல் அவுன் பற்றி வழங்கபட்ட ஃபத்வாகளும் தீர்மானங்களும்

தேவ்பந்திய தப்லிக் வஹ்ஹாபிகளால் இஸ்லாமிய போர்வையில்  இந்து போதனைகளே பரப்பும்  வாப்பா நாயகம் என்ற கலீல் அவுன் பற்றி வழங்கபட்ட  ஃபத்வாகளும் தீர்மானங்களும் திருச்சி மாவட்ட, மாநகர ,வட்டார உலமா சபை மூலம் வெளிடப்பட்ட வாப்பா நாயகம் என்ற கலீல் அவுன் பற்றிய  ஃபத்வாகளும் தீர்மானங்களும்  05-08-2018 ல் வேலுர் ஜாமிஆ அல்பாக்கியதுஸ் ஸாலிஹாத் வழங்கிய  பத்வா  (தற்சமயம் இந்த மதரஸா தேவ்பந்திய வஹ்ஹாபிகளின் கைகளுக்கு சென்றுவிட்டது..  இந்த மதரஸாவிலிருந்து தப்லீக் ஜமாஅத்திற்கு ஆதரவாகவும் பத்வா வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....) மேலும் தப்லீக் ஜமாஅத்தை  வளர்ப்பதற்ககா ( வஹ்ஹாபியிஷம்) ஆரம்பிக்கபட்ட மதரஸாவான  லால்பேட்டை உலமாக்களும் பத்வா வழங்கி உள்ளனர்  மற்றும் சேலம் மழாஹிருல் உலூம் மதரஸாவும் பத்வா வழங்கியுள்ளது இந்த மதரஸாவும் தேவ்பந்திய வஹ்ஹாபிகளுக்கு வக்காலத்து வாங்கக்கூடிய மதரஸா தான்

"ஓம்", என்பதைத்தான் நாம் "ஹூ." என்கிறோம்.! கலீல் அவுன் மௌலானா (வாப்பா நாயகம் ) புதிய கண்டுபிடிப்பு!

"ஓம்", என்பதைத்தான்  நாம்  "ஹூ." என்கிறோம்.!  கலீல் அவுன் மௌலானா (வாப்பா நாயகம் ) புதிய கண்டுபிடிப்பு! ●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•● ஷர்க்கி ,  பரேலவி. http://al-bathr.blogspot.com/2018/08/blog-post_22.html ●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•● கலீல் அவுன் மௌலானாவின் எழுத்தும் , பேச்சும் சுத்தமான ஹிந்து சமயகோட்பாட்டையே பிரதி பலிக்கின்றன. இவரின் இக்கோபாட்டிற்கும் அவரது தந்தை பாட்டன் மார்களுக்கும் இம்மியளவும் தொடர்பில்லை என்று உறுதியாக நாம் நம்புகின்றோம். அதற்கான ஆதாரமும் கலீல்அவுன் மௌலானாவின் புத்தகத்திலேயே உண்டு. கலீல் அவுன் மௌலானா தந்தையிடம் அரபு மொழியைக் கற்றிருக்கிறார். அதற்கப்பால் எவ்வளவு தூரம்  அரபுகிதாபுகளில் இவருக்கு மேலதிகஈடுபாடு உண்டு என்பது சந்தேகமே! இவரின் புத்தகங்களில் எந்த இடத்திலும் ஸூபி ஞானிகளின் கருத்துக்களைக் காணவில்லை. தமிழில் நன்கு தேர்ச்சி பெற்ற அவுன் மௌலானா , ஹிந்துக்களின் சமய இலக்கிய நூல்களில் தன்னைப் பறிகொடுத்துள்ளார். தனது விளக்கத்தில் முரீதீன் கள் சந்தேகப்படக்கூடாது என்ற அச்சத்திலேயே தான் குத்பு சமானாக இருப்பதாக ஐம்பது ஆண்டுகளாகக்  கூறி வருகிறார். இந்த