கலீல் அவுன் மௌலானா மறு பிறப்பை ஆதரிக்கின்றாரா.? ------------+------------ ஷர்க்கி .-பரேலவி . -----------+------------ கலீல் அவுன் மௌலானாவின் பின் வரும் கூற்று மறுபிறப்பை ஆதரிப்பது போன்றுள்ளது. பிறப்பு இறப்பின் இரகசியம் ---------------------------------------------- 22- அழிவென்பதும் இறப்பென்பதும் மறைவென்பதும் செல்லுதல் என்பதும் மாற்றமேயாகும். உலகம் மாறி மாறிப் பிறக்கிறது. இல்லாவதொன்றுமில்லை. உள்ளவையே எல்லாம். ஆகவே. ஏகத்தில் குறைதல் என்பதோ , நிறைதல் என்பதோ இல்லை. மறைகின்றவைகள் உருமாறி வெளிவருகின்றன. ஔன் நாயகரின் அருள் மொழிக் கோவை ,பக்,28 "உலகம் மாறி மாறி பிறக்கின்றன." மறைகின்றவைகள் உருமாறி வெளிவருகின்றன. என்ற கருத்துக்களும் படைப்பில் குறை நிறை இல்லை என்பதும், இருப்பவைதான் பின் உருமாறி வருகின்றன என்ற கூற்றுக்களும் ஹிந்துக்களின் மறு பிறப்புக்கோட்பாட்டை உறுதிப்படுத்துகின்றன. மேற்படி கூற்றில், புதிது பதிதான படைப்புக்கள் மறுக்கப்படுகின்றன. அழிந்த அதாவது இறந்த உடலின் அசல் பகுதி வேறு உருவில் மீண்டும் பிறக்கிறது. இக்கோட்பாடு " அனைத்தும் அழியும்,
புனித தரீகாகளில் கள்ள ஞானிகள்