Skip to main content

Posts

Showing posts from January, 2023

மஹ்லறா பத்வா செல்லாதா? மடையர்களின் பிதற்றல்

*மஹ்லறா பத்வா செல்லாதா? மடையர்களின் பிதற்றல்...*  அன்புள்ளம் கொண்ட சுன்னத் வல் ஜமாஅத் சகோதரர்களுக்கு,  அஸ்ஸலாமு அலைக்கும். வாட்ஸ்அப் தளங்களில் அன்வாரிய்யா தைக்கா என்ற பெயரில் ஒரு சுற்றறிக்கை கண்டோம். அதில் திருவிதாங்கோடு அப்துர் ரஹ்மான் அஹ்ஸனியின் தன்னிச்சை பத்வா செல்லாது காயல் மாநகர உலமா பெருமக்கள் மறுப்பு என்று சில கருத்துக்கள் பரிமாறப்பட்டு இருந்தன. அதற்கு பதில் கூறும் விதமாக இந்த அறிக்கை. மஹ்லறா அரபிக் கல்லூரி என்பது பாரம்பரியம் மிக்க சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு கௌதுல் அஃலம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் திருப்பேரர் அஸ்ஸெய்யிது அப்துல்லாஹில் காதிரியில் பகுதாதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அவர்கள் ஈராக் நாட்டின் பகுதாது நகரைச் சார்ந்தவர்கள். அவர்கள் கட்டமைத்த கொள்கை கோட்பாடுகளின்படி தான் இதுகாலம் வரை நடந்து வருகிறது. இன்ஷாஅல்லாஹ் இனியும் நடக்கும். கௌது நாயகம் அவர்கள் அதற்கு காவலாய் நிற்கிறார்கள். அந்த மத்ரஸாவின் முதல்வர் மேலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பரம்பரையைச் சார்ந்தவர்கள். - தங்கள் ஹழ்ரத் என்றழைக்கப்படும் அஸ்ஸெய்யிது அப்துர் ரஹ்ம

போலி தரீக்காவான நூரிஷா தரீக்கத் வழிகேடு என்று மஹ்லரத்துல் காதிரிய்யாவின் ஃபத்வா!

போலி தரீக்காவான நூரிஷா தரீக்கத் வழிகேடு என்று மஹ்லரத்துல் காதிரிய்யாவின் ஃபத்வா! தற்போதைய காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. வஹ்ஹாபி முதலில் அவர்கள் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி என்ற கயவன் ஒருவனின் கொள்கையை எடுத்து வந்தார்கள் பின்பு பல பல பெயர்களை கொண்டு தவ்ஹீத் ஜமாத், தப்லீக் ஜமாத் என்று பல பல இயக்கங்களை கொண்டு பல பல பெயர்களில் உருவெடுத்து வந்தார்கள், ஆனால் இவர்கள் அனைவருமே ஒரே சித்தாந்தத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அது முற்றிலும் அஹ்லுஸ் ஸுன்னத் ஜமாஅத்தின் கொள்கைக்கு மாற்றமானதாகும். மேலும் இவர்கள் தற்போது தரிக்கத்தின் ரூபத்திலும் உலாவி வருகிறார்கள் இவர்களை தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் இவர்களை விட்டும் விலகி இருக்க வேண்டும் என்று நமது ஷெய்குமார்கள் கூறியிருக்கிறார்கள் மேலும் அந்த தரீக்காக்களில் ஒன்றுதான் இந்த போலி நாரி நூரிஷா தரிக்கா என்பதாகும். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து இவர்களை விட்டும் நம் மக்கள் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று மஹ்லரத்துல் காதிரிய்யா ஃபத்வா வெளியிட்டுள்ளது.