*ரவூப் மௌலவியின் பொய் புரட்டு அம்பலமாகுகிறது…* https://youtu.be/1sz_nafdia0 ‘ *அல் கிப்ரீத்துல் அஹ்மர்’* என்று ஒரு ஃபத்வா வஹ்தத்துல் வுஜூது சம்பந்தமாக கோர்வை செய்திருப்பதாகவும், அதில் பெரும் மகான்கள் கையொப்பமிட்டிருப்பதாகவும் அதன் பிரதியை வெளியிடுவதாகவும் கடந்த வருடம் 2021 நவம்பர் மாதம் பதிவுகள் முக நூலில் வெளிவந்துக் கொண்டிருந்தன. அதில் பல்வேறு சம்பவங்கள் விவரிக்கப்பட்டிருந்தன. 1979 ஆம் ஆண்டுவாக்கில் காத்தான்குடி(இலங்கை)யைச் சார்ந்த *மௌலவி A. அப்துர் ரவூப் மிஸ்பாஹி* என்பவர் ஞானம் என்ற பெயரில் சில கருத்துக்களை பொதுமேடையில் பேசியதில் பிரச்சினைகள் ஏற்பட்டு இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரால் *முர்தத்* என்று ஃபத்வா வழங்கப்பட்டு இஸ்லாமிய சமூகத்தைவிட்டு ஒதுக்கப்பட்டதை தமிழ் பேசும் இஸ்லாமிய நல்லுலகம் அறியும். அதன்பின் செய்வதறியாது திகைத்து நின்ற அவர், காயல்பட்டினம் *ஸூபி ஹழ்ரத்* ரழியல்லாஹு அன்ஹு அவர்களை (அவர்களிடம்தான் இவர் பைஅத் பெற்றிருந்தார்) அணுகி இந்த இக்கட்டிலிருந்து தம்மை காத்தருள வேண்டி நின்றார். தம் (முரீது) பிள்ளையின் கலங்கலான பரிதாபகரமான நிலையைக் கண்டு மனம் வேதனைப்பட்டு அவரை இக்
புனித தரீகாகளில் கள்ள ஞானிகள்