கலீல் அவுன் மௌலானாவின் கற்பனைகள். !
✯ *Link* ➽ http://al-bathr.blogspot.com/2018/09/blog-post_10.html
●•●┄─┅━━━━━━━━━┅─┄●•●
ஷர்க்கி *** பரேலவி
●•●┄─┅━━━━━━━━━┅─┄●•●
கலீல் அவுன் மௌலானா ஒரு சாதாரணமானவராக இருந்தால் நாம் பெரிதாக அலட்ட மாட்டோம். அவர் ஒரு அஹ்லுல் பைத்தைச் சார்ந்தவராகவும் , ஒரு ஷெய்காகவும் இருக்கின்றார். மக்கள் குறிப்பாகப் பாமரர்கள் அவரைப் பின்பற்றுகின்றனர்.
அவர் தன்னை ஒருகுத்பு என்று கூறுவதால் அவர் பேச்சை வேதமாகக் கருதுகின்றனர். அதில் சரி, பிழை யாரும் பார்ப்பதில்லை. எதுவித ஆராய்வுமில்லாமல் சில
உலமாக்களும் அவர்பின்னால் நிற்பதனாலும்.பிரபலமான மற்றும் சில உலமாக்கள் அவரை ஆதரிப்பதனாலும் மக்கள்
இவர்கூறுவது முற்றிலும்
உண்மைதான் என்று நம்புகின்றனர்.
உண்மையில் பொறுப்பற்ற
உலமாக்களின் சுய நலத்தால் இவரின் மார்க்க விரோதப் பேச்சைக்கேட்டு அப்பாவிகள்வழி தவறிச் செல்கின்றனர்.
இந்த அவல நிலையிலிருந்து மக்களை மீட்டெடுக்க
வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் தான் அவரின் குறைகளை எழுத நிற்பந்திக்கப் பட்டோம்.
நமது எழுத்து சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக் கின்றது. அதனால் எம்மை வசைபாடுகின்றனர்
பாவம் அறியாதவர்கள்.என்ற எண்ணத்தில் அவர்களை
நாம் கவனத்தில் கொள்ளவில்லை .
கலீல் அவன் மௌலானா
தன்னை மாபரும் குத்பு என்றும் , மாபெரும் ஞானி என்றும் காட்டிக் கொள்ள பல்வேறு உபாயங்களைக்
கையாண்டு வந்துள்ளார்.
அவற்றுள் குத்பு என்பவர் கடவுளின் அவதாரமாகும். அதனால் தானும் மக்களை வழிகாட்ட அருவாயிருந்து
அவதாரமா உருவெடுத்து வந்துள்ளேன்.
இந்த நூற்றாண்டுக்கும் நான் தான் உலகத்தின் பாதுகாவலன். அடுத்த நூற்றாண்டுக்கும் நான் தான் பாதுகாவலன். என்னைப் போன்று இதற்குப் பிறகு யாரும்
தோன்ற மாட்டார்கள்.
என்றெல்லாம் கூறி தனது முரீதுகளின் மனதில் தன் மீதுள்ள பக்தியை ஆழப்பதித்து விட்டார்.
பக்தி முற்றி கண்ணையும்
புத்தியையும் மறைத்ததனால் அவர் சொல்வதைப்பகுத்துப் பார்க்கும் திறனற்றவர்களாகவே இருக்கின்றனர்.
கலீல் அவுன் மௌலானாவிடம் பைஅத் எடுத்த சில மௌலவிமார்கள் இலங்கையிலும் தமிழகத்திலும் இருக்கின்றனர்.
இவர்களுக்கு இவர்கருத்திலுள்ள விபரீதங்கள் விளங்கினாலும் தனதுசுய நலன் கருதி அவர் கருத்துக்களுக்கு தாளம் போடுகின்றனர்.
இந்த சுயநலமிகளான ஆலிம்களின் நயவஞ்சகத்தனத்தால் மார்க்கமும். அப்பாவி மக்களும் பாதிக்கப் படுகின்றனர்.
கலீல் அவுன் மௌலானாதன்னைப் பற்றிக் கூறுவதைப் பாருங்கள் .
18- ஹக்கின் (இறையின்)
திருநாமம் எங்கும் பரவ வேண்டும். அதற்கான வழி வகைகளைச் செய்தல் வேண்டும்.இதற்காகவே நாம் உருவம் பெற்று உதயமானோம்.
இறந்து மடிந்து , மருண்டு, மயங்கி இருக்கும் இதயங்களை ஹயாத்தாக்கவே (உயிர்பிக்கவே) நாம் அருவாயிருந்து உருவானோம்.
ஔன் நாயகரின் அருள்
மொழக் கோவை.--28
." இந்த நூற்றாண்டுக்கு
நாமேயுள்ளோம். இனி நமக்குப் பின் வரும் நூற்றாண்டுகளும் நம் பார்வையிலே நடைபெறும். எம்மை இந்த ஸமானில் (காலத்தில்)
அண்டியவர்கள் பெரும் பேறு பெற்றவர்களே!
எம்மை விட்டுவிட்டோர் கை
தேசப்பட்டவர். எம்மைப் போன்றவர் இதற்குப் பின்னால் எவரும் தோன்றமாட்டார்கள். இதுவே ஹக்கின்(இறைவனின் ) பஷாறத்
(நன் மாராயம்) ஆகும் மேற்படி
நூல் :54
"இன்றைய முஹம்மதும்,
அஹ்மதும் , மஹ்மூதும் நாமே. எதற்கும் அஞ்சாதீர்கள். எமது சுடர் உங்கள் கண்களில் என்றுமே வீசிக் கொண்டிருக்கும். ஹக்காக நாமிருக்க ஹக்கையே நீங்கள் பற்றியுள்ளீர்கள்.
சென்றவர்களை எம்மில் காணுங்கள். வருபவர்களும் நாமேயாவார்கள்.
இக்காலத்து மக்களை இரட்சிக்க வே எம்மைச் சிறுபிராயம் தொட்டே ஹக்கின் மடியில் வளர்த்து வந்தது.
மனிதா !கலீல் அவுன்மௌலானா அவர்களின் அமுத மொழிகள். 42
"இந்த நூற்றாண்டுக்கும் நாமே உள்ளோம். இனி நமக்குப் பின் வரும் நூற்றாண்டுக்களும் நமது பார்
வையிலேயே நடைபெறும்.
எம்மை இந்த ஜமானில்
(காலத்தில்) அண்டியவர்கள் பெரும் பேறு பெற்றவர்கள்.
" எம்மை விட்டு விட்டோர் கைதேசப்பட்டவர். எம்மைப்
போன்றவர் இதற்குப் பின்னால் எவரும் தோன்றமாட்டார்கள்.
இதுவே ஹக்கின் (இறைவனின்) பஷாரத்(நன்மாராயம்)ஆகும்.
மனிதா ! 116
இது போன்ற கருத்துக்கள் மூலம் தன்னை கௌதுல் அஃழம் முஹ்யத்தீன் அப்துல் காதீர் ஜீலானி கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அவர்களை ஒத்தவர் என்று நம்பச் செய்ய பிரயத்தனம் செய்கின்றார்.
இப்படியான பேச்சுக்களைக் கேட்டதும் முரீதீன்களுக்கு ஒரு சந்தேகம் பிறந்தது.
கௌதுல் அஃழம் அவர்கள் நிறைய கறாமாத்துக்களைக் காட்டினார்கள்.ஒரு குத்பு என்பவர் வலிமார்களுக் கெல்லாத் தலைவர் . சாதாரணமான வலிமார்கள் எல்லாம் கறாமத் காட்டும் போது குத்புல் பரீதாக இருக்கின்ற வாப்பா நாயகத்திடம் இருந்து கறாமத்துக்களைக் காணோமே!
இந்த சந்தேகத்தைப்போக்கவே பின்வரும் பதில் மெய்யொளியாக உதிர்கிறது.
குத்பு (மகான்) இடத்தில் அற்புதம் (கறாமத்) நாடிச்செல்ல வேண்டாம். கராமத் (அற்புதம் ) காட்டுவதும்.,
கராமத்தும் (அற்புதமும்)
ஒன்றேயாகும். ஏனெனில் கராமத்தின் இருப்பிடமே குதுபாவார்.
ஹக்கு தான் நாடிய நேரம் கராமத்தை (அற்புதத்தை) காட்டும். உங்கள் விருப்பத்திற்கேற்ப அது அடிபணியாது. கறாமத்தைக் கொண்டு விலாயத்தை அளப்பது மடமையாகும்.
ஔன் நாயகரின் அருள்மொழிக் கோவை - 38 -
முரீதுகள் தான் எதுகூறினாலூம் எதிர் கேள்விகள் கேட்கக் கூடாது
என்று எச்சரிக்கப் பட்டனர்.
மீறுபவர் சாபத்திற்கு உட்படுத்தப்படுவர். அந்நியப்படுத்தப் படுவர். இதற்கு அஞ்சியே பலர் அறிவுக்கு இடம் கொடுக்காமல்
அடங்கிப் போயினர்.
கலீல் அவுன் மௌலானாவின் கஸீதத்துல் அவுனியாவும் முரீதுகள்
மத்தியில் தனது தகுதியை
உயர்த்தவே பாடப்பட்டதாகும்.பொதுவாக,
ஆத்மீகப் பாதையில் செல்பவர் மூன்று பனாவைச் சந்திப்பார்.
1- பனா பிஷ்ஷெய்கு ஷெய்கில் பனா
2- பனா பிர்றஸூல் றசூலில் பனா
3- பனா பில்லாஹ்
அல்லாஹ்வில் பனா
ஒருவர் யாரில் பனா வாகியுள்ளாரோ அவர் பேசுவது போன்று பேசுவார். அவரின் குணம் இவரில் வெளியாகும். அவரிடமிருந்து அருளை (பைளை)ப் பெறுவார். அவர்
பார்வையில் யாரில் பனாவானோரோ அவரைத் தவிர வேறு எதுவும் தெரியாது.
அல்ஆரிபு பில்லா மன்சூர் ஹல்லாஜ் .,அனல் ஹக் என்றதும், ஷெய்கு குத்புல் வுஜூத் அபுல்ஹஸன் அலி
ஷாதுலி றழியல்லாஹு அன்ஹுமா ஒரு விநாடி எனக்கும் றஸூலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் இடையில் திரையேற்படுமாயின் என்னை முஸ்லிமாகக் கருதமாட்டேன். என்ற கூற்றுக்கள் பார்க்கப்படுகின்றன.
அதுபோல் வலிமார்கள் ஏதாவது ஒருநபியின் குணத்திலிருப்பார்கள். எந்த நபியின் குணம் மிகைத்துள்ளதோ அந்த நபியின் அறிவின் , குணத்தின் சாயல் அவரில் வெளிப்படும் அப்போது தன்னை மறந்த நிலையில் தான் சார்ந்திருக்கும் பக்கம் தன்னை இணைத்து நான் தான் ஈஸா .நான் தான் மூஸா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்லாம் என்று கூறுவர்.
ஆத்மீகப் பாதையில் நடப்போரில் இப்படியான வார்த்தைகள் அவரின் நிலையை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
ஆனால் எந்த ஒரு நிலையிலும் ஒரு சாலிக் (ஆத்மீக வாதி) நான் புத்தனாக , ராமனாக, கிறிஷ்னணாக , சிவனாக, இருப்பதாகக் கூறமாட்டார்.
இவர்களில் எவரும் நேர்வழியில் சந்திப்பவர்கள் அல்ல.நேர்வழி என்பது அல்லாஹ்வின் வழி . இதுவே சிறாத்துல் முஸ்தகீம்.
வழிகேடர்களும் சாபத்திற்குரியவர்களும்
இந்த வழியில் இருக்க மாட்டார்கள். அப்படியிருக்க கலீல் அவுன் மௌலானா
"நீத புத்தர் நான் நித்திய ஜீவன் நான்
எது நிறை ஏக தத்துவசுத்த சத்தியன் நான் .
ஆதி கிறிஷ்ணன் நான் ராம ராம நான்.
சோதி கலீல் நான் ஆதி அவுன் நான்
ஆதிநிலை நின்று விளையாடுஞ் சிவன் நான்.
என்று கூறுவதெல்லாம் வழிகேட்டின் வாசலால் வந்த சாக்கடைகளாகும்.
இவற்றில் வெளிப்படையான குப்றியத்துகளும் காணப்படுகின்றன.
கலீல் அவுன் மௌலானா வின் எண்ணத்தில் கிறிஷ்ணன் , ராமன் புத்தர், உள்ளிட்டோர் நபிமார்களும் இறை அவதாரங்களுமாகும்
வெளிப்படையான காபிர்களை நபி என்று கூறுவது குப்றில்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்.
கலீல் அவுன் மௌலானா
சுய நினைவில் தான் இதனைப் பாடியிருக்கின்றார். அதனால் தான் தனது பெயர் அவருக்கு நினைவிலிருக்கின்றது.
ஆக , கலீல் அவுன் மௌலானா வின் அனைத்து சிந்தனைகளும் போதனைகளும் இந்து சமயம் சார்ந்ததாகவும், இஸ்லாத்திற்கு முற்றிலும் முரண்பட்ட மார்க்கத்தைப் போதிப்பதாகவுமே இருக்கின்றது.
ஆதலால் இவருக்கு ஒத்துழைப்பதும் இவர் கருத்தை ஏற்று அவர் தரீக்கில்
இருப்பவர்களும் கலீமாச் சொல்லி ஈமானைப் புதிப்பிக்க வேண்டும்.
இப்படியானவர்களோடு முஸ்லிம்கள் எந்த விதமான சமயரீதியான தொடர்புகளை வைப்பதைப் பற்றி
அல்லாஹ்வை அஞ்ச வேண்டும்.
யாவும் அறிந்த அல்லாஹ்
ஒருவனே!
Comments
Post a Comment