வஹ்தத்துல் வுஜுத் என்ற பெயரில் வழிகேடுகள் எச்சரிக்கை!!
------------+-++----------+++----
ஷர்க்கி,. பரேலவி.
--------------* ----------
இலங்கையில் வஹ்தத்துல் வுஜுத் என்ற சொல்லாடல்
கடலை வியாபாரத்தையும் மிஞ்சிய அங்காடி வியாபாரமாகிவிட்டது.
இவ்வியாபாரத்தை குறிப்பிட்ட ஒருசிலர் தங்கள் குருவின் குறையை மறைக்க வில்லங்கத்தோடுசெயல்படுகின்றனர்.
இஸ்லாம் தோன்றிய காலம் முதல் போதிக்கப்பட்டு வந்த கோட்பாடுகள் எல்லாம் இவர்களிடம் செல்லாக்காசாகி விடுகின்றன.
இவர்களின் அனைத்து போதனைகளும் இவர்களில் தோன்றி இவர்களுக்குள்ளே. சமாதியாகுவது இவர்களின்
போதனைகளின் சிறப்பம்சமாகும்.
ஷைகுல் அக்பர் இப்னு அரபி ரலியல்லாஹு அல்ஹு அவர்கள் போதித்த
வஹ்தத்துல் வுஜூத் கோட்பாட்டையே போதிக்கின்றோம் என்று கூறி அவர்களின் முகத்திலேயே காரி உமிழ்கின்றனர்.
"அல்லாஹ் ". என்ற திருநாமம் எதற்குரிய பெயர் என்ற அடிப்படை அறிவற்ற வர்களாகவே வேதாந்தம் பேசுகின்றனர்.
படைப்பு இல்லாமலிருந்து வந்தது புதிதாகப் படைக்கப்படவில்லை என்கின்றனர். அது அல்லாஹ்வின் வுஜுதிலிருந்து வந்தது என்கின்றனர்.
இவர்கள் வாதப்படி,
படைப்பு புதிதல்ல! பூர்வீகம்! ஆகும்.! ஆகும்.காரணம்
"கதீம்". என்றால், இன்மை முந்தாதது. என்பது பொருள்.!
"பாகி". என்றால், இன்மை பிந்தாதது.
அகீதா நூலின் அருச்சுவடிப் பாடமிது!
படைப்புக்கு முன் இன்மை இல்லை என்றால், படைப்பு
கதீம் ! பூர்வீகம்! என்று அர்த்தமாகும்.!
படைப்பு பூர்வீகமா? புதிதா?
என்று அவர்களிடம் கேட்டால் பூர்வீகம் அல்ல! புதிது ! என்றுதான் கூறுவர்.
புதிது என்பது இன்மை முந்தியதற்கு சொல்லப்படும் பெயரல்லவா என்று அவர்களிடம் திருப்பிக் கேட்டால் திட்ட ஆரம்பிப்பர்.
சகல அறிஞர்களும் தாங்கள் எழுதிய நூலின் முன்னுரையில்,
எனது புத்தகத்தில் ஏதும் தவறுகள் இருப்பதைக் கண்டால் தயவுசெய்து அறியத்தர வேண்டும். அடுத்த பதிப்பில் நன்றியோடு திருத்திக் கொள்வோம் என்று அடக்கத்தோடு எழுதுவர்.
ஆனால், அனைத்தையும் மறந்து அல்லாஹ்வில் ஃபனாவான
இந்த மகா முனிவர்களோ,
எமது எழுத்தில், பேச்சில் நடத்தையில் குறை காண்பவர்கள் அடக்கத்தோடு மௌனியாக வாய்பொத்தி இருக்க வேண்டும்.
மீறினால் எமது அடங்காப் பிடாரி ப் படையினர் புடை சூழ உங்களைக் கவனித்துக் கொள்வார்கள் என்று மிரட்டுவர்.
ஷைகுல் அக்பர் இப்னு அரபி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் உட்பட சகல வஹ்தத்துல் வுஜுத் போதிக்கின்ற ஞானிகளும்
படைப்பு இல்லாமிருந்து புதிதாக வந்ததுதான்!
என்று அவர்களின் நூலிலிருந்தே நாம் எடுத்துக்காட்டினால் நம்மைப் பார்த்து முட்டாள்! என்கின்றனர்.
ஷைகுல் அக்பரின் கூற்றைத்தானே முன் வைத்தேன் என்று அவர்களுக்கு குத்திக்காட்டினால்,
குர்ஆனில் காட்டும் என்று
மடக்கிப்பேசுகின்றனர்.
படைப்பு புதிதல்ல என்றால் தஷ்பீஹ், ஙைரியத், ஷரீஅத் எப்படி வரும்? என்றுஅவர்களிடம் கேட்டு விடாதீர்கள். காரணம் வஹ்தத்துல் வுஜூதைப் புரியாதவர்களின் வார்த்தைப் புரளிகள் இவை! என்று கூறி புதுப் க்குழப்பத்தை ஆரம்பித்து விடுவர்.
இதற்கெல்லாம் அவர்களிடமிருந்து வரும் பதில் கூட்டாகச்சேர்ந்து குரைப்பது தான்.
மொத்தத்தில் இந்த வழிகெட்ட கூட்டம் வஹ்தத்துல் வுஜுத் பேசவில்லை! இதன் பெயரால் சிலரை ஏமாற்றி
வயிறு வளர்க்கின்றனர்.
இவர்களகளின் வாடை பட்டவனும் குப்று , ஷிர்க் சகதியை முகத்தில் பூசிக்கொண்டவனாவான்.
Comments
Post a Comment