Skip to main content

வஹ்தத்துல் வுஜுத் என்ற பெயரில் வழிகேடுகள் எச்சரிக்கை

வஹ்தத்துல் வுஜுத் என்ற பெயரில் வழிகேடுகள் எச்சரிக்கை!!
------------+-++----------+++----
ஷர்க்கி,. பரேலவி.
--------------* ----------
இலங்கையில் வஹ்தத்துல் வுஜுத்  என்ற சொல்லாடல்
கடலை வியாபாரத்தையும் மிஞ்சிய அங்காடி வியாபாரமாகிவிட்டது.

இவ்வியாபாரத்தை குறிப்பிட்ட ஒருசிலர் தங்கள் குருவின் குறையை மறைக்க  வில்லங்கத்தோடுசெயல்படுகின்றனர்.

இஸ்லாம் தோன்றிய காலம் முதல் போதிக்கப்பட்டு வந்த கோட்பாடுகள் எல்லாம் இவர்களிடம் செல்லாக்காசாகி விடுகின்றன.

இவர்களின் அனைத்து போதனைகளும் இவர்களில் தோன்றி இவர்களுக்குள்ளே. சமாதியாகுவது இவர்களின்
போதனைகளின் சிறப்பம்சமாகும்.

ஷைகுல் அக்பர் இப்னு அரபி ரலியல்லாஹு அல்ஹு அவர்கள் போதித்த
வஹ்தத்துல் வுஜூத் கோட்பாட்டையே போதிக்கின்றோம் என்று கூறி அவர்களின் முகத்திலேயே காரி உமிழ்கின்றனர்.

"அல்லாஹ் ". என்ற திருநாமம் எதற்குரிய பெயர் என்ற அடிப்படை அறிவற்ற வர்களாகவே வேதாந்தம் பேசுகின்றனர்.

படைப்பு இல்லாமலிருந்து வந்தது புதிதாகப் படைக்கப்படவில்லை என்கின்றனர். அது அல்லாஹ்வின் வுஜுதிலிருந்து வந்தது என்கின்றனர்.

இவர்கள் வாதப்படி,

படைப்பு  புதிதல்ல!  பூர்வீகம்! ஆகும்.! ஆகும்.காரணம்

"கதீம்". என்றால், இன்மை முந்தாதது. என்பது பொருள்.!

"பாகி". என்றால், இன்மை பிந்தாதது.

அகீதா நூலின் அருச்சுவடிப் பாடமிது!

படைப்புக்கு முன் இன்மை இல்லை என்றால், படைப்பு
கதீம் !  பூர்வீகம்! என்று அர்த்தமாகும்.!

படைப்பு பூர்வீகமா? புதிதா?
என்று அவர்களிடம் கேட்டால் பூர்வீகம் அல்ல! புதிது ! என்றுதான் கூறுவர்.

புதிது என்பது இன்மை முந்தியதற்கு சொல்லப்படும் பெயரல்லவா  என்று அவர்களிடம் திருப்பிக் கேட்டால் திட்ட ஆரம்பிப்பர்.

சகல அறிஞர்களும் தாங்கள் எழுதிய நூலின் முன்னுரையில்,

எனது புத்தகத்தில் ஏதும் தவறுகள் இருப்பதைக் கண்டால் தயவுசெய்து அறியத்தர வேண்டும். அடுத்த பதிப்பில் நன்றியோடு திருத்திக் கொள்வோம் என்று அடக்கத்தோடு எழுதுவர்.

ஆனால், அனைத்தையும் மறந்து அல்லாஹ்வில் ஃபனாவான
இந்த மகா முனிவர்களோ,

எமது எழுத்தில், பேச்சில் நடத்தையில் குறை காண்பவர்கள் அடக்கத்தோடு மௌனியாக வாய்பொத்தி இருக்க வேண்டும்.

மீறினால் எமது அடங்காப் பிடாரி ப் படையினர் புடை சூழ உங்களைக் கவனித்துக் கொள்வார்கள் என்று மிரட்டுவர்.

ஷைகுல் அக்பர் இப்னு அரபி றழியல்லாஹு அன்ஹு  அவர்கள் உட்பட சகல வஹ்தத்துல் வுஜுத் போதிக்கின்ற ஞானிகளும்
படைப்பு இல்லாமிருந்து புதிதாக வந்ததுதான்!
என்று அவர்களின் நூலிலிருந்தே நாம் எடுத்துக்காட்டினால் நம்மைப் பார்த்து முட்டாள்! என்கின்றனர்.

ஷைகுல் அக்பரின் கூற்றைத்தானே முன் வைத்தேன் என்று அவர்களுக்கு குத்திக்காட்டினால்,

குர்ஆனில் காட்டும் என்று
மடக்கிப்பேசுகின்றனர்.

படைப்பு புதிதல்ல என்றால் தஷ்பீஹ், ஙைரியத், ஷரீஅத் எப்படி வரும்? என்றுஅவர்களிடம் கேட்டு விடாதீர்கள். காரணம்  வஹ்தத்துல் வுஜூதைப் புரியாதவர்களின் வார்த்தைப் புரளிகள் இவை! என்று கூறி புதுப் க்குழப்பத்தை ஆரம்பித்து விடுவர்.

இதற்கெல்லாம் அவர்களிடமிருந்து வரும் பதில் கூட்டாகச்சேர்ந்து குரைப்பது தான்.

மொத்தத்தில் இந்த வழிகெட்ட கூட்டம் வஹ்தத்துல் வுஜுத் பேசவில்லை! இதன் பெயரால் சிலரை ஏமாற்றி
வயிறு வளர்க்கின்றனர்.

இவர்களகளின் வாடை பட்டவனும்  குப்று , ஷிர்க் சகதியை முகத்தில் பூசிக்கொண்டவனாவான்.

Comments

Popular posts from this blog

கலீல் அவுன் மௌலானாவின் கற்பனைகள் !!!

கலீல் அவுன் மௌலானாவின் கற்பனைகள். ! ✯ *Link* ➽ http://al-bathr.blogspot.com/2018/09/blog-post_10.html ●•●┄─┅━━━━━━━━━┅─┄●•● ஷர்க்கி  *** பரேலவி ●•●┄─┅━━━━━━━━━┅─┄●•● கலீல் அவுன் மௌலானா ஒரு சாதாரணமானவராக இருந்தால் நாம் பெரிதாக அலட்ட மாட்டோம். அவர் ஒரு அஹ்லுல் பைத்தைச் சார்ந்தவராகவும் , ஒரு ஷெய்காகவும் இருக்கின்றார். மக்கள் குறிப்பாகப் பாமரர்கள் அவரைப் பின்பற்றுகின்றனர். அவர் தன்னை ஒருகுத்பு என்று கூறுவதால் அவர் பேச்சை வேதமாகக் கருதுகின்றனர். அதில் சரி, பிழை யாரும் பார்ப்பதில்லை. எதுவித ஆராய்வுமில்லாமல் சில உலமாக்களும் அவர்பின்னால்  நிற்பதனாலும்.பிரபலமான மற்றும் சில உலமாக்கள் அவரை ஆதரிப்பதனாலும் மக்கள் இவர்கூறுவது முற்றிலும் உண்மைதான் என்று நம்புகின்றனர். உண்மையில் பொறுப்பற்ற உலமாக்களின் சுய நலத்தால் இவரின் மார்க்க விரோதப் பேச்சைக்கேட்டு அப்பாவிகள்வழி தவறிச் செல்கின்றனர். இந்த அவல நிலையிலிருந்து  மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் தான் அவரின் குறைகளை எழுத நிற்பந்திக்கப் பட்டோம். நமது எழுத்து சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக் கின்றது. அதனால் எம்மை வசைபாடுகின்றன

வஹ்ததுல் வுஜூத் கோட்பாடும், மௌலவி அப்துர் றஊபின் வழிகேடும்

வஹ்ததுல் வுஜூத் கோட்பாடும், மௌலவி அப்துர் றஊபின் வழிகேடும் கலீபத்துல் காதிரி  AL. பதுருதீன் ஷர்கி பரேலவி அவர்கள்    ஓர் ஆய்வு"                 வஹ்தத்துல் வுஜூத் கோட்பாட்டையும் , தஸவ்வுபின் நோக்கத்தையும் அறிந்து கொள்வதற்கு பின்வரும் கோட்பாடுகளைக் தெரிந்திருப்பது அவசியமாகும். வாசகர்கள் கவனமூன்றி படிப்பதன் மூலமே இத்தொடரின் உள்ளடக்கத்தை அறியமுடியும் .! இத்தொடரில் வருபவற்றை கிரகிக்கும் திறனில்லாதவர்கள் தயவு செய்து ஒதுங்கி இருப்பது சிறப்பாகும். தொடர்ந்து கோட்பாடுகளைப் படியுங்கள்.! 1)    எதார்த்தமான இருப்பு وجود உள்ள பொருள் அல்லாஹுத்தஆலா உடைய தாத்தோடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.அல்லாஹ் அல்லாத படைப்புகளின் இருப்பு என்பது சுயமாக இல்லாதது. அல்லாஹ் அல்லாதவையின் தாத் சார்பாக ( عرض ஆக)வும் அல்லாஹ்வுடைய வுடையய தாத்தோடு தொடர்புபட்டதாகும். அதாவது , அல்லாஹ்வின் தாத்தைக்கொண்டு நிலைத்து நிற்க கூடியதாகும். 2)    அல்லாஹ்வின் திருநாமங்களும் , படைப்புக் (களான ممكن ) களும்  ( عين ) அல்லாஹ்வின்" தாத்"