உலமாக்களே! வழிகேட்டிற்குத் துணை போகாதீர்கள் !
___________________________
கலீபதுல் காதிரி, மௌலவி. பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி – பரேலவி) அவர்கள்
ஆதி வேதத்தில் எந்தப் பிரிவும் இல்லை. ஆதிவேதம் எல்லாமே ஒன்று. இஸ்லாமிய வேதமாயிருந்தால் என்ன.?
இந்து வேதமாயிருந்தால் என்ன ? பௌத்த வேதமாயிருந்தால் என்ன?
கிறித்துவ வேதமாயிருந்தால் என்ன ?
ஏதாயிருந்தாலும்,அது தாற்பரியத்தில் ஒன்றையே கூறிக் கொண்டிருக்கிறது.
அந்தத் தாற்பரியத்தை நாங்கள் அடைய முடியாதிருப்பதற்குக் காரணம் எம்மகத்தே உள்ள திரைகளாகும்.
அப்படியான வேற்றுமைத்
திரைகள் எங்களில் இல்லாது நாம் அனைவரும் ஒன்று.
வேதப் பிரிவுகள் இருந்தாலும் நம் தாற்பரியம் ஒன்றே
ஒரே இடத்தை அடையப் போகிறோம் எனும் உண்மையான அந்த நிலையை
அடைந்து விட்டால் எல்லாமே ஒன்று.
எல்லாம் தனிமயம் என்ற அந்த நிலைக்கு வந்து விடுவோம்.
இதுதான் மனிதனாக நாம் வாழ்ந்து நாம் பெறக் கூடிய இன்பம்.
இந்த உலகத்திலேயே இந்த
இன்பத்தைப் பெற்றிட வேண்டும்.இந்த உலகிலேயே நம்மால் பெற முடியாவிட்டால் எந்த உலகிலேயும்
எம்மால் பெற முடியாது.
ஏனென்றால் சந்தேகத்திலேயே வாழ்பவர்களுக்கு அந்த உலகத்திலும் சந்தேகம்தான் வரும்.
ஞான விளக்கத்தைத் தேடும் எங்களில் வித்தியாசம் இன்றி எல்லோரும் ஒன்று. ஒரே நிலை .
அந்த மதம் ஞானத்தில் எதைக் கூறுகிறது.அதே போல இந்த மதம் ஞானத்தில் எதைக்கூறுகிறது
என்பதைநல்ல முறையில் கற்றுவாழ முன்வருதல் வேண்டும்.
அனேகமாக இந்து ஞானத்திற்கும் இஸ்லாமிய ஞானத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
நானும் பல புத்தகங்களில் வாசித்துள்ளேன். இப்படி இருக்கும் போது எங்களில் எந்த வித்தியாசமும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதாவது, எந்த மதமாக இருந்தாலும்
எல்லாம் ஒரே மதம்தான்.!
நாங்கள் பின்பற்றுவதை அப்படியே பின்பற்றிக் கொள்வோம்.
கலீல் அவுன் மௌலானா
(வாப்பா நாயகம்.)
ஆதாரம்: ஔன் நாயகரின்
அருள் மொழிகள்.
தமிழ்-ஆங்கிலம்.
பக்கம் : 81'82
மூன்றாம் பதிப்பு: 2015
உலமாக்களே!
எம்மதமும் சம்மதம் , என்பது
இஸ்லாமியக் கோட்பாடா?
முஷ்ரிக்குகள்., காபிர்கள் எல்லோரினதும் போதனை
ஒன்றுதானா ?
மறுமையில் முஸ்லிம்களும்
முஷ்ரிக்குகளும்., காபீர்களும் செல்லுமிடம் ஒன்றா ?
இந்தத் தத்துவத்தைப் போதிப்பவர் தன்னை குத்பு சமான் சம்சுல் வுஜூத் என்று மாபெரும் ஆத்மீக ஜோதி அபுல் ஹசன் சாதுலி நாயகம் கத்தஸல் லாஹு சிர்ரஹுல் அஸீஸ்
அவர்களுக்கு நிகராகக் கூறமுடியுமா?
இக்கருத்தைத்தான் யாசீன் மௌலானா அவர்களும் கூறினார்களா?
இப்படிக் கூறுபவர் அஹ்லுல் பைத் என்பதால் இது நியாயப்படுமா ?
வஹாபிகள் பிழையாகப்பேசினால் மட்டும்தான் மார்க்கம். மற்றவர்களுக்கு இல்லையா .?
உலமாக்களே ! இது அல்லாஹ்வின் மார்க்கம்..!
இதில்கையடிக்க எவருக்கும் உரிமையில்லை.!
பிழையான விளக்கம் கொடுப்போர் யாராக இருந்தாலும் அதற்கெதிராக
குரல் கொடுக்க வேண்டியது உலமாக்களின் இன்றியமையாத கடமை!
தனது சுக போகத்திற்காக
மார்க்கத்தை விலை பேசவேண்டாம்.
உலமாக்களே ! மறுமையில்
நிச்சயம் நீங்களும் விசாரிக்கப்படுவீர்கள்.!
அப்பாவிகள் வழிகெட்டுச்செல்ல நீங்களும் காரணமாகாதீர்கள்.!
Comments
Post a Comment